விபத்துள்ளான விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்ன துணை விமானி!

மங்களூர் விமான நிலையம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் ஓடுதளமான ரன்வே ஒரு மலையின் மீது தான் அமைந்துள்ளது. ரன்வேயின் இரு முனைகளிலும மலைப் பள்ளத்தாக்குகள் உள்ளன. இதனால் இந்த ரன்வே, table-top runway என்று அழைக்கப்படுகிறது. இதில் விமானத்தை தரையிறக்க அதிக அனுபவம் வேண்டும்.
கடந்த 22ம் தேதி துபாயிலிருந்து இங்கு தரையிறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரன்வேயில் ஓடி, நிற்காமல், மலைப் பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்துச் சிதறி 158 பேர் பலியாயினர்.
அதன் கருப்புப் பெட்டி கைப்பற்றப்பட்டு இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராயப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த விமானத்தின் காக்பிட்டில், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடல், மங்களூர் விமான நிலைய தரைக்கப்பாட்டு மையத்திலும் பதிவாகியுள்ளது.
இந்த உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது விபத்துக்கான காரணம் தெரியவந்துள்ளது.
விமானத்தை தரையிறக்க இங்கிலாந்தைச் சேர்ந்த விமானியான கேப்டன் ஸ்லாட்கோ குளுசிகா முயன்றபோது, வேண்டாம் என்று தடுத்துள்ளார் துணை விமானியான அலுவாலியா. அப்போது விமானம் 800 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.
விமானம் அதிக வேகத்தில் தரையிறங்க முயன்றதாலோ அல்லது உயரத்தை போதிய அளவுக்குக் குறைக்காமல் ரன்வேயை அடைய பைலட் முயன்றதாலோ அவரை அலுவாலியா தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
இரண்டு முறை கேப்டனை தடுத்த அலுவாலியா, இன்னொரு முறை வானில் வட்டமடித்துவிட்டு தரையிறங்க முயற்சி்க்கலாம் என்று கூறியுள்ளது தரைக்கப்ப்டடு மையத்தில் பதிவாகியுள்ளது.
இவ்வளவு வேகத்தில் தரையிறக்கினால், விமானத்தை ரன்வேக்குள் நிறுத்துவது கடினம், அது மலையில் உருண்டுவிட வாய்ப்புள்ளதை உணர்ந்து அலுவாலியா, கேப்டனைத் தடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ஆனால், அந்த கோரிக்கையை கேப்டன் நிராகரித்துவிட்டு விமானத்தை தரையிறக்கியபோது தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானம் ரன்வேயின் ஆரம்பத்திலேயே தரையிறங்காமல் 2,000 அடி தள்ளி தரையிறங்கியது. அப்போது விமானத்தை ரன்வேயில் நிறுத்த முடியாது என்பதை கேப்டன் உணர்ந்ததாலோ என்னவோ மீண்டும் டேக்-ஆப் செய்ய முயன்றுள்ளார்.
ஆனால், அதற்குள் டயர்கள் வெடித்து, விமானம் கட்டுப்பாட்டை இழந்துவிட, ரன்வேயைத் தாண்டி ஓடி, பள்ளத்தாக்கில் உருண்டுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த போயிங் 737 விமானத்தை தரையிறக்கிய 4,500 முதல் 5,000 அடி தூரத்திலேயே நிறுத்திவிட முடியும். 2,000 அடி தள்ளி இறங்கியிருந்தாலும் ரன்வேயில் மிச்சமிருந்த 6000 அடி தூரத்தில் அதை நிறுததியிருக்க முடியும். ஆனாலும், அதை ஏன் மீண்டும் டேக்-ஆப் செய்ய விமானிகள் முயன்றனர் என்பது கேள்வியாக உள்ளது.
மேலும் துணை விமானி அலுவாலியா ஏன் விமானத்தை தரையிறக்க வேண்டாம் என்று சொன்னார் என்பது கருப்புப் பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதன் மூலமே துல்லியமாக அறிய முடியும் என்றும் விசாரணை அதிகாரிகள் கருதுகின்றனர்.
மங்களூர் விமான நிலையத்தி்ற்கு கேப்டன் குளுசிகா 19 முறையும் துணை விமனியான அலுவாலியா 66 முறையும் விமானங்களை இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அலுவாலியா மங்களூரில் வசித்தவரும் ஆவார். இம்மாத இறுதியில் கேப்டனாக பதவி உயர்வு பெற இருந்தார். ஏர் இந்தியாவில் சேரும் முன் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
அமெரிக்கா செல்லும் கருப்புப் பெட்டி:
இந் நிலையில் இந்த விமானத்தின் கருப்புப் பெட்டி மிகுந்த சேதமடைந்துள்ளதால் அதிலிருந்து விவரங்களைப் பெற, அதை அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவன தலைமையகத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ரன்வே நீளம் அதிகரிப்பு:
இதற்கிடையே மங்களூர் விமான நிலையத்தின் ஓடுதளத்தின் நீளம் மேலும் 1000 அடி அதிகரிக்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறியுள்ளார்.
8,000 அடி நீளமான இந்த ஓடுதளம் 9,000 அடியாக அதிகரிக்கப்படவுள்ளது.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications