அம்மிக் கல்லை வீசி தாய் கொலை- மன நலம் பாதிக்கப்பட்ட மகன் கைது
நாகர்கோவில்: நாகர்கோவிலில் தாயின் தலையில் அம்மி கல்லை போட்டு மகன் கொலை செய்தார். பின்னர் அவரே போலீஸ் நிலையத்தில் வந்து கொலை செய்த தகவலை கூறினார்.
நாகர்கோவில் வடசேரி காமராஜர் நகர் அம்மன் கோவி்ல் தெரு பகுதியை சேர்ந்தவர் அந்தோணி அருள்தாஸ். இவரது மனைவி வில்லி மேரி. இவரது மகன் ராஜேஷ். வில்லி மேரி உடல்நிலை சரியில்லாத நிலையில் இருந்துள்ளார். கூலி வேலைக்கு சென்று வந்த ராஜேசும் சமீப காலமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை.
அவருக்கு ஏற்கனவே இருந்த போதை பழக்கத்தின் காரணமாக அவ்வப்போது மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கான மருந்து மாத்திரைகளை உட்கொண்டு வந்திருக்கிறார். வில்லி மேரியின் சகோதரி மற்றும் உறவினர்கள் சிறு, சிறு உதவிகளை செய்து வந்தனர். வழக்கம்போல் நேற்று இரவு வில்லி மேரியும், ராஜேசும் வீட்டில் படுத்திருந்தனர்.
இந்த நிலையில் திடீரென ராஜேஷ் இன்று காலை ரத்தக் கறையுடன் வடசேரி காவல் நிலையம் வந்தார். அப்போது போலீஸ் நிலையத்தில் இரு போலீஸ்காரர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
தனது தாயை அம்மி கல்லை தூக்கி போட்டு கொலை செய்து விட்டேன் என்று கூறி போலீஸ் நிலையத்துக்குள் அவராகவே அமர்ந்தார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்று காலை டிஎஸ்பி பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சோனமுத்து, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். வீ்ட்டை திறந்து பார்த்த போது தலை நசுங்கிய நிலையில் வில்லி மேரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். போலீசார் வந்தபிறகே அக்கம்பக்கத்தினருக்கு கொலை செய்யப்பட்ட தகவல் தெரிய வந்தது.
உடலை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications