அதிமுக போராட்டத்தில் திமுகவினர் அமளி- 10 பேர் காயம்
வேலூர்: வேலூரில் அதிமுகவினர் நடத்திய போராட்ட இடத்திற்கு எதிரே திமுகவினர் இலவச உணவு வழங்கும் விழாவை நடத்தினர். அப்போது திமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதலில் போலீஸார் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காத வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை 10 மணியளவில் வேலூர் தபால் அலுவலகம்முன்பு அதிமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி தபால் நிலையம்முன்பு போராட்டம் நடந்தது. ஆனால் போராட்டம் நடந்த இடத்திற்கு எதிரே திமுகவினர் இலவச உணவு வழங்கும் விழாவை நடத்தினர்.
இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே மோதல் மூண்டது. இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அவர்களைத் தடுக்க முயன்ற போலீஸாரும் தாக்கப்பட்டனர்.
இந்த மோதலில் 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தால் தபால் நிலைய பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications