கசாப்பை விடுவிக்க விமானத்தை கடத்த தீவிரவாதிகள் திட்டம்

இதையடுத்து மும்பை விமான நிலையம் உள்பட நாடு முழுவதுமே விமான நிலையங்களில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ தான் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் உதவியோடு நடத்தியதாக அமெரிக்காவில் பிடிபட்ட டேவிட் ஹெட்லி, இந்திய விசாரணைக் குழுவினரிடம் தெரிவித்துள்ள நிலையில், இந்த விமானக் கடத்தல் திட்டத்தை அரங்கேற்றி கசாவை விடுவிக்குமாறு மத்திய அரசிடம் பேரம் பேச தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அல்-கொய்தா, தலிபான்கள் உதவியோடு ஜெய்ஷ்-ஏ-முகம்மத் தீவிரவாதிகள் நேபாளத்தில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ஆப்கானிஸ்தானிஸ்தானின் காந்தஹார் விமான நிலையத்துக்குக் கடத்தி தீவிரவாதிகளை விடுவித்த பாணியில் இப்போதும் கசாபை விடுவிக்க முயல்வதாகத் தெரிகிறது.
முதலில் தீவிரவாதிகளின் நேபாளத்தில் இருந்து டெல்லி, மும்பைக்கு வரும் விமானங்களை கடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்த சதி திட்டம் குறித்து ரா மற்றும் ஐபி உளவுப் பிரிவுகள் விமான போக்குவரத்துத் துறையை உஷார்படுத்தின. இதையடுத்து நேபாள தலைநகர் காட்மாண்டு விமான நிலையத்தில் இந்திய அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். அதோடு இந்திய விமானங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் விமானக் கடத்தல் திட்டம் முறியடிக்கப்பட்டது.
இந் நிலையில் உளவுத்துறையினர் மீண்டும் ஒரு எச்சரிக்கை தகவலை தந்துள்ளனர். அதில், மும்பையில் இருந்து புறப்படும் அல்லது மும்பைக்கு வரும் விமானத்தை தீவிரவாதிகள் கடத்த உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தீவிரவாதிகளின் தற்கொலை படை மும்பை விமான நிலையத்துக்குள் அதிரடியாக புகுந்து தாக்குதல் நடத்தி விமானத்தை கடத்த முயற்சி செய்யக்கூடும் என்றும் உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால் மும்பை விமான நிலையத்தில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மும்பை விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் 12 தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சாதாரண உடை போலீசார் ரோந்து பணியில் சுற்றி வந்து சந்தேகப்படும் நபர்களை கண்காணிக்கின்றனர்.
நேபாளம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் விமானத்தை கடத்த இயலவில்லை என்பதால் மும்பையில் இருந்து புறப்பட்டு செல்லும் விமானத்துக்குத்தான் தீவிரவாதிகள் குறி வைத்திருப்பதாக மராட்டிய மாநில உளவுத்துறைக்கும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 2 பேர் இந்த கடத்தலில் ஈடுபட முயலக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பை தொடர்ந்து நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல பிற விமான நிலையங்களிலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications