தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும்!

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையும் வங்க கடலில் காற்று சுழற்சியும் ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில தினங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு நிலையும், காற்று சுழற்சியும் அதே இடத்தில் நீடிக்கிறது.
சென்னை மற்றும் புறநகரில் நேற்றிரவு ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 3.5. மி.மீட்டர் மழையும், விமான நிலையத்தில் 2.6. மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. எனவே இன்றும் மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று காலை முதல் வெயிலும், மேகக் கூட்டமுமாக உள்ளது. திடீரென நல்ல வெயில் அடிக்கிறது. பிறகு மழை வரப் போவது போல வானம் இருண்டு வருகிறது. இப்படியாக மழை கண்ணாமூச்சிக் காட்டிக் கொண்டிருக்கிறது.
மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் அதிக தண்ணீர் திறக்கப்படுவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications