ஆகஸ்ட் 11 முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் 34 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிவரன் முறைபடுத்தி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வழங்க வேண்டும், 8 மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட விடுப்புகள் வழங்க வேண்டும், அனைத்து ஊழியர்களுக்கும் சீரான இன் சென்டிவ் வழங்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யதுள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications