இந்த பந்த் தொடக்கம்தான், எங்களது போராட்டம் தொடரும்-தா.பாண்டியன்
சென்னை: மத்திய அரசின், மக்கள் விரோத விலை உயர்வு கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த பந்த் போராட்டம் ஒரு தொடக்கமேயாகும். வரும் நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் தொடரும் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை கண்டித்து இடதுசாரி கட்சிகள், அ.தி.மு.க, ம.தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன. தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில், கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இந்த பாரத் பந்திற்கு ஆதரவளிக்கும் வகையில் முழுமையாக இயங்காதிருந்தன.
இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் குறைவான மக்களே பயணம் செய்தனர். தமிழகம் முழுமையும் கைத்தறி, விசைத்தறி, பாத்திரம் தயாரிப்பு, அப்பளம் தயாரிப்பு போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்ட லட்சக்கணக்கான தொழிலாளர்கள், உரிமையாளர்கள் முழுமையாக பணிகளை நிறுத்தினர். பின்னலாடை என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்களில் பணிபுரியும் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
பல்வேறு ஆலைகளிலே பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பணிகளை புறக்கணித்துள்ளனர். மாநிலத்தின் சில பகுதிகளில் விவசாய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களும் பணிகளை புறக்கணித்தனர்.
மத்திய அரசின், மக்கள் விரோத விலை உயர்வு கொள்கைக்கு எதிராக நடைபெற்ற இந்த பந்த் போராட்டம் ஒரு தொடக்கமேயாகும். வரும் நாட்களில் மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான கூட்டுப் போராட்டங்கள் தொடரும்.
தமிழகத்தில், பந்த் போராட்டம் பெரும் வெற்றிபெற காரணமாக செயலாற்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி, அ.தி.மு.க, ம.தி.மு.க, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, பார்வர்டு பிளாக் தொண்டர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
பந்த போராட்ட தினத்தன்று கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினரின் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டு சிறையிலடைக்க முயற்சிப்பதையும் எதிர்கட்சி தொண்டர்கள் மீது ஆயுதம் கொண்டு நடத்திய தாக்குதல்களையும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications