செப்டம்பரில் போக்குவரத்து ஊழியர்கள் சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

நெல்லை: அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அடுத்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வரும் செப்டம்பர் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும்.

இந்த பேச்சுவார்த்தை போக்குவரத்து அமைச்சர் கே.என். நேரு தலைமையில் சென்னையில் நடத்தப்படும். இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்று ஊதிய உயர்வு தொடர்பான முடிவுகளை எடுப்பார்கள். கடந்த ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கூட்டம் 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி சென்னையில் நடந்தது. அதில் 1-9-2007 முதல் 31-8-2010 வரை ஊதிய உயர்வு முடிவு செய்யப்பட்டது.

ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இதனால் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை செம்படம்பர் மாதத்தில் நடத்த உள்ளதாக போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகங்கள் செய்து வருகின்றன. புதிய ஊதிய உயர்வை அனைத்து ஊழியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+