என்ஜினீயரிங் கல்வித் தரத்தை உயர்த்த பாடத் திட்டத்தில் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

Ponmudi
சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி மன்ற முதல் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் பொன்முடி தலைமையில் இன்று நடந்தது.

இக் கூட்டத்துக்குப் பி்ன் நிருபர்களிடம் பேசிய பொன்முடி,
தமிழகத்தில் 550 என்ஜினீயரிங் கல்லூரிகள் வந்துவிட்டன. இந்திய அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் மாணவர்கள் பொறியியல் கல்வி முடித்து வெளியேறுகிறார்கள். இதில் தமிழகத்திலிருந்து மட்டும் 1.5 மாணவர்கள் படித்து வெளியேறுகிறார்கள்.

இதனால் கல்வியின் தரத்தை உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாடத் திட்டத்தை மாற்ற முடிவு செய்துள்ளோம். தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு நேரடிப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும் தேர்வு முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்படும்.

தமிழகத்தில் உள்ள 5 அண்ணா பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து கொடுத்த சம்பவம் தொடர்பாக டி.பி.ஐயில் உள்ள ராமச்சந்திரன் என்பவர் பிடிபட்டுள்ளார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சில தன்னாட்சி கல்லூரி களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்துள்ளது. அவற்றை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பொறியியல் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது குறித்து புகார் தெரிவித்தால் அக்கல்லூரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் தற்கொலை போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவதால் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் கவுன்சில் பிரிவு உருவாக்க முடிவு செயயப்பட்டுள்ளது என்றார் பொன்முடி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+