இனி கட்டணம் செலுத்தினால்தான் செம்மொழி பாடல் காலர் டியூன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நாள் வரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல் காலர் ட்யூனை இனிமேல் கட்டணம் செலுத்தியே பெற வேண்டும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான பாடல் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு மைய நோக்குப் பாடல். இதையடுத்து திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் துறையின் கீழ் வரும் பி.எஸ்.என்.எல். நிறுவனம், இந்த பாடலை காலர் ட்யூனாக இலவசமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.

ஒரே நாளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் செல்போனின் அழைப்பாக இந்த பாடலை பதிவு செய்தனர். இந்த இலவச சேவை இன்றுடன் முடிகிறது.

அதன் பின்னர் நாளை முதல் இந்தப் பாடலை காலர் ட்யூனாக செட் செய்ய விரும்புவோர் ரூ. 28 தர வேண்டும். இந்தப் பாடல் இனி வேண்டாம் என்றால் இன்றே அதை ரத்து செய்து விட வேண்டும். இதற்காக 0567020 என்ற எண்ணை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது. இன்றைக்குள் ரத்து செய்யாவிட்டால் நாளை முதல் மாதந்தோறும் ரூ. 28 பிடித்தம் செய்யப்படும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+