அமித் ஷாவிடம் விசாரணையை தொடங்கியது சிபிஐ

Subscribe to Oneindia Tamil

Amit Shah
காந்திநகர்: சோராபுதீன் ஷேக் போலி என்கெளண்ன்ட்டர் வழக்கில் முன்னாள் குஜராத் உள்துறை இணையமைச்சர் அமித் ஷாவிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணையைத் தொடங்கினர்.

குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் மூன்று நாட்கள் இந்த விசாரணை நீடிக்கவுள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணையை சிபிஐ ஒளிப்பதிவு செய்து வருகிறது.

குற்றப்பத்திரிகை லீக்: சிபிஐ மீது ஜேத்மலானி புகார்:

இதற்கிடையே அமித் ஷாவுக்கு எதிரான குற்றப் பத்திரிகையை சிபிஐ தான் கசியவிட்டது என்று பாஜக ராஜ்யசபா எம்பியும் அமித் ஷாவுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞருமான ராம் ஜேத்மலானி குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், சோராபுதீன் போலி என்கெளண்ட்டர் வழக்கில் அமித் ஷா மீதான குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் நாள்தோறும் மீடியாக்களில் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு இதுவரை குற்றப்பத்திரிகையின் நகல் அளிக்கப்படவில்லை.

சிபிஐயின் இத்தகையை செயலை பார்க்கும் போது அது அமித் ஷாவுக்கு எதிராக தவறுதலாகப் பயன்படுத்துவது அப்பட்டமாகத் தெரிகிறது. இதை நான் கண்டிக்கிறேன்.

அமித் ஷாவிடம் சிபிஐ விசாரிப்பதில் எங்களுக்கு ஆட்சேபனையில்லை. ஆனால் அவரிடம் கேட்கப்படும் கேள்விகளும், அதற்கு அவர் அளிக்கும் பதில்களும் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.

அமித் ஷாவிடம் நடக்கும் விசாரணையை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதை சிபிஐ மதித்து நடக்க வேண்டும் என்றார் ராம் ஜேத்மலானி வலியுறுத்தினார்.

நேற்று ராஜ்யசபாவில் எம்பியாக பதவியேற்றவுடன் இந்த வழக்கில் ஆஜராக ஜேத்மலானி அகமதாபாத் விரைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+