Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கசாப் வழக்கு ஆகஸ்ட் 12க்கு ஒத்திவைப்பு: மேல் முறையீடு செய்ய அரசு முடிவு

Subscribe to Oneindia Tamil

மும்பை: 26/11 தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது அஜ்மல் கசாபின் தண்டனையை உறுதி செய்வதை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.

இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் விஜயா தகில்ரமணி ஆகயோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஹிம் அன்சாரி, சபாவுத்தீன் ஷைக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மாநில அரசு மேல் முறையீடு செய்யும் என அரசு வழக்கறிஞர் பாண்டுரங் அறிவித்ததை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இருவரும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு காரணங்களால் இன்று கசாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதற்கு முன் கசாப் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதால் மஹாராஷ்டிர அரசு செலவில் அமின் சொல்கார், பர்ஹானா ஷா ஆகியோர் கசாபுக்காக வாதாட நியமிக்கப்பட்டுள்ளனர்.

சொல்கார் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. கசாப் மேல்முறையீடு செய்ய 2 மாத அவகாசம் கேட்டுள்ளார் ஷா. ஆகஸ்ட் 12-ம் தேதி சொல்கார் மற்றும் அரசு வாதங்களை கேட்ட பிறகே எந்த உத்தரவும் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கசாப்பின் மரண தண்டனையை உறுதிபடுத்தும் தனது தீர்ப்பை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டது. கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையின் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்கள் 166 பேரை கொன்றுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள உஜ்வால் நிகாம் என்பவரை கசாப்பின் தண்டனையை உறுதி செய்வது குறித்து வாதாடவும், அன்சாரியும், அஹமதும் விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசு நியமித்துள்ளது.

இன்று நிகாம் நீதிமன்றத்திற்கு வராததால், அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் பாண்டுரங் ஆஜரானார். மரண தண்டனையை உறுதி செய்வது, கசாப் மற்றும் அரசின் மேல் முறையீடுகளையும் உயர் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கசாப் செய்தது மன்னிக்கக்கூடிய குற்றம் அன்று. எனவே, கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்காமல் மரண தண்டனை விதிப்பதே உகந்தது என்று கூறியுள்ளது.

கசாப் தற்போது ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் வெடி குண்டோ, துப்பாகி குண்டோ துளைக்கமுடியாத தனி அறையில் வைக்கப்பட்டுள்ளான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+