கசாப் வழக்கு ஆகஸ்ட் 12க்கு ஒத்திவைப்பு: மேல் முறையீடு செய்ய அரசு முடிவு
மும்பை: 26/11 தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது அஜ்மல் கசாபின் தண்டனையை உறுதி செய்வதை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் விஜயா தகில்ரமணி ஆகயோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஹிம் அன்சாரி, சபாவுத்தீன் ஷைக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மாநில அரசு மேல் முறையீடு செய்யும் என அரசு வழக்கறிஞர் பாண்டுரங் அறிவித்ததை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இருவரும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களால் இன்று கசாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதற்கு முன் கசாப் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதால் மஹாராஷ்டிர அரசு செலவில் அமின் சொல்கார், பர்ஹானா ஷா ஆகியோர் கசாபுக்காக வாதாட நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொல்கார் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. கசாப் மேல்முறையீடு செய்ய 2 மாத அவகாசம் கேட்டுள்ளார் ஷா. ஆகஸ்ட் 12-ம் தேதி சொல்கார் மற்றும் அரசு வாதங்களை கேட்ட பிறகே எந்த உத்தரவும் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கசாப்பின் மரண தண்டனையை உறுதிபடுத்தும் தனது தீர்ப்பை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டது. கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையின் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்கள் 166 பேரை கொன்றுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள உஜ்வால் நிகாம் என்பவரை கசாப்பின் தண்டனையை உறுதி செய்வது குறித்து வாதாடவும், அன்சாரியும், அஹமதும் விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசு நியமித்துள்ளது.
இன்று நிகாம் நீதிமன்றத்திற்கு வராததால், அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் பாண்டுரங் ஆஜரானார். மரண தண்டனையை உறுதி செய்வது, கசாப் மற்றும் அரசின் மேல் முறையீடுகளையும் உயர் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கசாப் செய்தது மன்னிக்கக்கூடிய குற்றம் அன்று. எனவே, கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்காமல் மரண தண்டனை விதிப்பதே உகந்தது என்று கூறியுள்ளது.
கசாப் தற்போது ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் வெடி குண்டோ, துப்பாகி குண்டோ துளைக்கமுடியாத தனி அறையில் வைக்கப்பட்டுள்ளான்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications