கசாப் வழக்கு ஆகஸ்ட் 12க்கு ஒத்திவைப்பு: மேல் முறையீடு செய்ய அரசு முடிவு
மும்பை: 26/11 தீவிரவாத தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முஹம்மது அஜ்மல் கசாபின் தண்டனையை உறுதி செய்வதை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது மும்பை உயர் நீதிமன்றம்.
இந்த வழக்கு நீதிபதிகள் ரஞ்சனா தேசாய் மற்றும் விஜயா தகில்ரமணி ஆகயோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஹிம் அன்சாரி, சபாவுத்தீன் ஷைக் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து விரைவில் மாநில அரசு மேல் முறையீடு செய்யும் என அரசு வழக்கறிஞர் பாண்டுரங் அறிவித்ததை அடுத்து இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இருவரும் போதிய ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களால் இன்று கசாப் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. இதற்கு முன் கசாப் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டதால் மஹாராஷ்டிர அரசு செலவில் அமின் சொல்கார், பர்ஹானா ஷா ஆகியோர் கசாபுக்காக வாதாட நியமிக்கப்பட்டுள்ளனர்.
சொல்கார் இன்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. கசாப் மேல்முறையீடு செய்ய 2 மாத அவகாசம் கேட்டுள்ளார் ஷா. ஆகஸ்ட் 12-ம் தேதி சொல்கார் மற்றும் அரசு வாதங்களை கேட்ட பிறகே எந்த உத்தரவும் வழங்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
கசாப்பின் மரண தண்டனையை உறுதிபடுத்தும் தனது தீர்ப்பை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவிட்டது. கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி மும்பையின் பல இடங்களில் குண்டு வைத்து அப்பாவி மக்கள் 166 பேரை கொன்றுள்ளனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ள உஜ்வால் நிகாம் என்பவரை கசாப்பின் தண்டனையை உறுதி செய்வது குறித்து வாதாடவும், அன்சாரியும், அஹமதும் விடுவிக்கப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அரசு நியமித்துள்ளது.
இன்று நிகாம் நீதிமன்றத்திற்கு வராததால், அரசு சார்பாக அரசு வழக்கறிஞர் பாண்டுரங் ஆஜரானார். மரண தண்டனையை உறுதி செய்வது, கசாப் மற்றும் அரசின் மேல் முறையீடுகளையும் உயர் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 6-ம் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் கசாப் செய்தது மன்னிக்கக்கூடிய குற்றம் அன்று. எனவே, கசாப்பிற்கு ஆயுள் தண்டனை விதிக்காமல் மரண தண்டனை விதிப்பதே உகந்தது என்று கூறியுள்ளது.
கசாப் தற்போது ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் வெடி குண்டோ, துப்பாகி குண்டோ துளைக்கமுடியாத தனி அறையில் வைக்கப்பட்டுள்ளான்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications