இந்தியா, பாக்.கில் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம்-அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன்: இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே மேற்கண்ட நாடுகளுக்கு செல்லும் அமெரிக்க குடிமக்கல் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் எனவும் அது அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் செய்தியில், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருவதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக அமெரிக்க இலக்குகளையும், அமெரிக்கர்களையும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்படலாம்.
இந்தியாவில் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது தீவிரவாதிகள் குறி வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக சொகுசு ஹோட்டல்கள், ரயில்கள், ரயில் நிலையங்கள், மார்கெகட்கள், தியேட்டர்கள், மசூதிகள், ரெஸ்டாரென்ட்டுகளை அவர்கள் குறி வைக்கிறார்கள்.
இந்தியா உள்ளிட்ட மேற்கண்ட பிராந்தியங்களில் லஷ்கர் இ தொய்பா, தலிபான், அல் கொய்தா உள்ளிட்ட தீவரவாத அமைப்புகளால் அமெரிக்கர்களுக்கும், அமெரிக்க நலன்களுக்கும் மிரட்டல்கள் தொடருகின்றன.
எனவே இந்த நாடுகளுக்குச் செல்லும் அமெரிக்கர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications