For Quick Alerts
For Daily Alerts
Just In
ராணுவ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து விரைவில் பொன்சேகா அப்பீ்ல்
கொழும்பு: தன்னைக் குற்றவாளி என அறிவித்துள்ள ராணுவ கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சரத் பொன்சேகா அப்பீல் செய்யவுள்ளார் என்று அவரது கட்சியான ஜனநாயக தேசியக் கூட்டணியின் எம்.பியான அனுரா குமார திஸநாயகே கூறியுள்ளார்.
ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில் அரசியலில் ஈடுபட்டதாக கூறி பொன்சேகாவை குற்றவாளி என ராணுவ கோர்ட் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை ஏற்ற ராஜபக்சே பொன்சேகாவின் பென்ஷனை நிறுத்த உத்தரவிட்டார். மேலும், அவரது பதக்கம், அந்தஸ்து ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து அனுரா கூறுகையில், ராணுவ கோர்ட்டின் தீர்ப்பு உள்பட எதையுமே நாங்கள் அங்கீகரிக்கவில்லை, ஏற்கவில்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து சிவில் நீதிமன்றத்தில் நாங்கள் விரைவில் அப்பீல் செய்வோம்.
பொன்சேகாவின் அரசியல் வாழ்க்கையை அடியோடு அழிக்க ராஜபக்சே அரசு நினைக்கிறது என்றார் அனுரா.
Comments
Story first published: Sunday, August 15, 2010, 16:48 [IST]