For Quick Alerts
For Daily Alerts
Just In
எத்தனால் விலை லிட்டருக்கு ரூ. 27 ஆக நிர்ணயம்
டெல்லி: சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்கு லிட்டருக்கு ரூ. 27 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது.
இந்த எத்தனால் பெட்ரோலுடன் கலந்து விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இது தற்காலிக விலைதான், இதுதொடர்பாக விரைவில் நிபுணர் குழு அமைக்கப்பட்டு அது பரிந்துரைக்கும் விலை இறுதியாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை நிர்ணய முடிவை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கமிட்டி எடுத்துள்ளது. தற்போது எத்தனாலின் விலை லிட்டருக்கு ரூ. 21.50 ஆக உள்ளது.
எத்தனாலுக்கான விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான முடிவை திட்டக் கமிஷன் உறுப்பினர் செளமித்ரா செளத்ரி தலைமையிலான குழு விரைவில் அரசுக்குப் பரிந்துரைக்கும்.
Story first published: Monday, August 16, 2010, 15:58 [IST]