சுதந்திர தின விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் உத்தரவு
நெல்லை: சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நெல்லை மாவட்ட தொழிலாளர் நல ஆய்வாளர் சுடலைராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
சென்னை தொழிலாளர் ஆணையர் ஹன்ஸ்ராஜ் வர்மா உத்தரவின் பேரில் நெல்லை மண்டல தொழிலாளர் துணை ஆணையர் சுந்தர் ராஜன் ஆலோசனைப்படி நெல்லை மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் சுடலைராஜ் தலைமையில் சுதந்திர தினத்தன்று நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் நெல்லை, பாளை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, வள்ளியூர் ஆகிய பகுதிகளில் ஒரு நாள் சிறப்பாய்வு நடத்தினர்.
இதில் சுதந்திர தினத்தன்று சிப்பந்திகளுக்கு விடுமுறையோ அல்லது அன்றைய தினம் பணிபுரியும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்காத குற்றத்திற்காக 32 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மீது சட்டரீதியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications