தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்படுகிறது-தங்கபாலு
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாகவே செயல்படுகிறது. சோனியா காந்தி வழிகாட்டுதலின்பேரிலேயே அனைவரும் செயல்படுகிறோம் என்று கார்த்தி சிதம்பரத்திற்கு மறைமுகமாக பதிலளித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு.
சென்னையில் நடந்த கூட்டத்தில் கார்த்தி சிதம்பரம் பேசுகையில், தமிழகத்துக்கு ஏற்ற வகையில் காங்கிரஸ் செயல்படவில்லை என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் தங்கபாலு பேசுகையில்,
தமிழகத்தின் நலனை பாதுகாக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பணியாற்றி வருகிறது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் நிர்வாகிகள் சிலர் தெரிவித்துள்ள கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது.
சோனியா காந்தி வழிகாட்டுதலின் பேரில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படுகிறது. கார்த்தி சிதம்பரத்தின் முழுமையான பேச்சின் விபரம் எனக்கு கிடைக்கவில்லை. அது கிடைத்தவுடன்தான் அதற்கான பதிலை கூறமுடியும் என்றார்.












Click it and Unblock the Notifications