யுஎஸ் சொன்னதால் இந்திய நிவாரண உதவியை ஏற்ற பாகிஸ்தான்

நியூயார்க் வந்துள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஷா மகமூத் குரேஷி இதுகுறித்துக் கூறுகையில், இந்தியாவின் உதவியை ஏற்க பாகிஸ்தான் சம்மதித்துள்ளது. இந்தியாவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளோம்.
இந்தியாவின் உதவியை முதலில் நாங்கள் ஏற்காததற்கு அரசியல் காரணமல்ல. நாங்கள் அரசியல் செய்யவில்லை. இஸ்லாமாபாத்தில் நான் இருந்தபோது என்னை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலைபேசியில் தொடர்புகொண்டார். வெள்ளத்தில் ஆயிரக்கணக்கானோர் பலியானதற்கு இரங்கல் தெரிவித்தார். பாகிஸ்தானுக்கு உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
தற்போது அதை நாங்கள் ஏற்றுள்ளோம். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நன்றிதெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இது நிச்சயம் நேர்மறையான அணுகுமுறை. இந்தியாவின் உதவிக்கு பாகிஸ்தான் கடமைப்பட்டுள்ளது, அதை அங்கீகரிக்கிறது.
பிரதமர் கிலானியுடன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். வெள்ள நிலமை குறித்து கவலை தெரிவித்துள்ளார் என்றார் குரேஷி.
முன்னதாக இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்க தயங்குவது குறித்து அமெரிக்கா அதிருப்தி தெரிவித்திருந்தது. இதில் அரசியலைக் கலக்கக் கூடாது, இந்தியாவின் உதவியை ஏற்குமாறு அது பாகிஸ்தானுக்கு கண்டிப்புடன் கூறியிருந்தது. இதையடுத்தே இந்தியாவின் உதவியை பாகிஸ்தான் ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications