சட்ட மாணவர் மீது தாக்குதல்-நீதி விசாரணை கோரும் சிபிஎம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: சட்டக் கல்லூரி மாணவரை நிர்வாணப்படுத்தி காவல்துறை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை...

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் அசோக்குமார் பேருந்தில் பயணம் செய்த போது சகபயணி ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பேருந்திலிருந்து திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் இறக்கி விடப்பட்டுள்ளார்.

அங்கு, காவல்துறையினர் அசோக் குமாரை நிர்வாணப்படுத்தி, கடுமையாக தாக்கியுள்ளனர்.இதில்அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. இதனால், அவரை செங்கல்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

மாணவர் அசோக்குமாரை விசாரணையின்றி நிர்வாணப்படுத்தி, உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் கடுமையாகத் தாக்கியுள்ள திருக்கழுக்குன்றம் போலீசாரின் இந்த செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மாணவர் அசோக்குமார் தாக்கப்பட்டது குறித்து தற்போது, நீதிபதியாக உள்ள ஒருவர் மூலம் நீதி விசாரணை நடத்த வேண்டும், அசோக்குமாரை தாக்கிய காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி கேட்டுக் கொள்கின்றது என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+