For Daily Alerts
Just In
எல்.எல்.எம். தேர்வில் பிட் அடித்து சிக்கிய 3 நீதிபதிகள்
வராங்கல்: ஆந்திராவில் எல்எல்எம் சட்டப் படிப்புக்கான தேர்வின்போது காப்பி அடித்து 3 நீதிபதிகள் சிக்கியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் நீதிபதிகளின் பதவியுர்வுக்காக எல்.எல்.எம். சட்டப்படிப்பு தேர்வுகள் ஒரு கல்லூரி தேர்வு மையத்தில் நடைபெற்றது.
இதில் ஆனந்தபூரைச் சேர்ந்த கிஸ்தப்பா, அஜித்சிம்மராவ், ரெங்காரெட்டி ஆகிய நீதிபதிகளும், மற்றும் சில வக்கீல்களும் தேர்வு எழுதினர். தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் மூன்று நீதிபதிகளும் பிட் அடித்துக் கொண்டிருந்ததை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கண்டுபிடித்து அவர்களை கையும் களவுமாக பிடித்தார்.
அவர்கள் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேசமயம், 2 தேர்வுகளை எழுத தடை விதிக்கப்பட்டது.
Comments
Story first published: Thursday, August 26, 2010, 14:41 [IST]