சென்னை மெட்ரோ திட்டம்-இந்த ஆண்டு மத்திய அரசு நிதி இல்லை
Subscribe to Oneindia Tamil

இதுதொடர்பாக ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் செளகதா ராய் பதிலளிக்கையி்ல்,
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு 2010-11ம் ஆண்டு ரூ.652 கோடி நிதி ஒதுக்கியது. எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திடாததால் அந்த நிதி விடுவிக்கப்படவில்லை.
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே மத்திய அரசால் நிதியை விடுவிக்க முடியும்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசு ரூ 152.79 கோடி நிதி அளித்துள்ளது. மாநில அரசும் ரூ.1,050 கோடி நிதி அளித்துள்ளது. இந்த ஆண்டு மாநில அரசு மேலும் ரூ.600 கோடி ஒதுக்க வேண்டும்.
2015ம் ஆண்டில் இந்த ரயி்ல் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராய்.












Click it and Unblock the Notifications