ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா-ரங்கநாதர் கோவிலில் வழிபட்டார்
சமீபத்தில் திருச்சியில் நடந்த கண்டனக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டார். அன்றே அவர் ஸ்ரீரங்கம் செல்வதாக இருந்தது. ஆனால் தோழி சசிகலாவின் நாத்தனார் மரணமடைந்து 30 நாட்கள் முடியாததால், சசியால் வர முடியவில்லை. இதையடுத்து ஜெ. தனது திட்டத்தை தள்ளிப் போட்டார்.
இந்த நிலையில் சென்னையிலிருந்து இன்று மதியம் 2.30 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வந்த ஜெயலலிதா, 3.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் நுழைந்தார்.
பின்னர் மூலவர் சன்னதி, தாயார் சன்னதியில் வழிபாடு நடத்திய அவர், தொடர்ந்து சக்கரத்தாழ்வார் மற்றும் ராமானுஜ உடையவர் சன்னதியிலும் சாமி கும்பிட்டார்.
வழிபாட்டை முடித்துக் கொண்ட பின்னர் மீண்டும் திருச்சி திரும்பிய ஜெயலலிதா விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.
தனது ஸ்ரீரங்கம் விஜயத்தில் அரசியல் எதுவும் இல்லை, இது எனது தனிப்பட்ட பயணம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதாவின் வருகையைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.