For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெங்கு காய்ச்சலுக்கு 6 மாத குழந்தை பலி: கடையநல்லூரி்ல் பரபரப்பு

Google Oneindia Tamil News

கடையநல்லூர்: கடையநல்லூரில் டெங்கு காய்ச்சலுக்கு 6 மாதக் கைக்குழந்தை பலியானது.

கடையநல்லூர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்தியது. உயர் அதிகாரிகள் அறிவுரையின்படி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் டெங்கு காய்ச்சலால் 40க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதன் பிறகு காய்ச்சலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில் அன்மையில் பெய்து வரும் மழையினாலும், கழிவு நீர் தேக்கத்தினாலும் டெங்கு காய்ச்சல் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. நேற்று சேவல்விளையைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் 6 மாத குழந்தை இசக்கிதுரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த குழந்தையை நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது. இந்த சம்பவத்தால் கடையநல்லூரி்ல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்தி, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X