ரோசய்யா தொகுதியில் ராஜசேகர ரெட்டி சிலை வைக்க அரசு தடை
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யாவின் தொகுதியில், மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலையை வைக்க ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடையை மீறி சிலை திறக்கப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறியுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சீராளா தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ ஆனவர் ரோசய்யா. அந்தத் தொகுதியில் தற்போது ராஜசேகர ரெட்டியின் சிலையை ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் நிறுவியுள்ளனர். இதை செப்டம்பர் 3ம் தேதி திறந்து வைக்கவுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆனால் இந்த சிலை வைக்கவும், திறக்கவும் ஆந்திர அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து தடையை மீறி சிலையை திறப்போம் என ஜெகன் மோகன் ரெட்டி ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதட்டம் நிலவுகிறது. செப்டம்பர் 3ம் தேதி வரை அங்கு போலீஸ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications