சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்க-ஜெ.
சென்னை: கோட்டை நோக்கி முற்றுகைப் போராட்டம் அறிவித்ததற்காக, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
காலமுறை ஊதிய விகிதம், ஓய்வூதியம், பதவி உயர்வு உள்பட தங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் 30.8.2010 அன்று கோட்டை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
29.8.2010 முதல் வெளி மாவட்டங்களிலிருந்து சென்னை நோக்கி சத்துணவு ஊழியர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து, பெண்கள் உள்பட அனைத்து சத்துணவு ஊழியர்களும் இரவு நேரங்களில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனையும் மீறி, 30-8-2010 அன்று சத்துணவு ஊழியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிச்சாமி கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். போராட்டத்தை வாழ்த்த சென்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும், நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்களும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்ட பணி நீக்கம் மற்றும் இதர ஒழுங்கு நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர். ஆட்சி விரைவில் மலரும்; சத்துணவு ஊழியர்களின் குறைகள் தீரும் என்பதை மட்டும் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அண்ணா பிறந்த நாள் கூட்டங்கள்:
ஜெயலலிதா வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு, செப்டம்பர் 15-ந் தேதி முதல் முதல் 17-ந் தேதி வரை மூன்று நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியம், நகரம் மற்றும் பகுதிகளிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, டெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications