கேரளாவில் கள் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது: 6 பேர் தமிழர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் விஷக் கள் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் தமிழர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் குற்றிபுரம் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 3 பேர் இறந்து கிடந்தனர். மேலும் 3 பேர் மயங்கிய நிலையில் இருந்தனர். விசாரணையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள குற்றிபுரம் மற்றும் வண்டூர் கள்ளுக் கடையில் மீத்தேன் ஆல்கஹால் அதிகளவு கலக்கப்பட்ட கள் குடித்தது தெரிய வந்தது.
அதுபற்றி மேலும் விசாரித்தபோது வெள்ளிக்கிழமை இரவே அந்த பகுதியில் பலர் பலியாகி இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் கள் குடித்தது தான் அவர்கள் சாவுக்கு காரணம் என்பது தெரியாமல் இருந்தது. ரயில் நிலையத்தில் மயங்கிக் கிடந்தவர்களை பரிசோதித்தபோது தான் உண்மை அம்பலமானது.
இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களில் இதுவரை கள் குடித்த 23 பேர் இறந்துள்ளனர். மேலும் 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலியானவர்களில் 6 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலையைச் சேர்ந்த நீதி, தனசேகரன், வேலூரைச் சேர்ந்த சின்னசாமி, தி்ண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த ரவிசந்திரன் ஆகியோர் அடையாளம் தெரிந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.
கேரளாவில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த முதல்வர் அச்சுனாந்தன் உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரிகள் 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கள்ளுக் கடை உரி்மையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications