For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியை ராகுல் சந்திக்காமல் போவது ஏன்? கார்த்தி சிதம்பரம் கூறும் காரணம்

Google Oneindia Tamil News

Karunanidhi and Rahul Gandhi
கம்பம்: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி தமிழகம் வரும் போது, முதல்வர் கருணாநிதியை சந்திக்காமல் செல்வதாக கூறுகின்றனர். அவர் உட்கட்சி பிரச்னைகளுக்காகத்தான் தமிழகம் வருகிறார். எனவே தான் கருணாநிதியை சந்திக்கவில்லை என்று கூறியுள்ளார் கார்த்தி சிதம்பரம்.

கம்பம் வந்த கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசார் அதிக அளவில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும். மத்திய அரசின் சாதனைகளை கூற மக்களை சந்திக்க வேண்டும். கூட்டணியில் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும் என்பது என் நிலைப்பாடு.

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடரும்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துக்களில் தனிநபர் விமர்சனத்தை தவிர்த்து, நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். நான் அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினராக உள்ளேன்.

கம்பத்தில் கூட்டத்தில் கலந்து கொள்ள யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை.

பிரமாண்டத்தை மக்கள் விரும்புகின்றனர். காங்கிரசாலும் பிரமாண்டத்தை காட்ட முடியும். திராவிட கட்சிகளுக்கு காங்கிரஸ் சளைத்தது அல்ல. ராகுல் தமிழகம் வரும் போது, முதல்வர் கருணாநிதியை சந்திக்காமல் செல்வதாக கூறுகின்றனர். அவர் உள்கட்சி பிரச்னைகளுக்காக தமிழகம் வருகிறார். எனவே தான் கருணாநிதியை சந்திக்கவில்லை.

மதுரை விமான நிலையம் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தால் திறக்கப்பட உள்ளது என்றார் கார்த்தி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X