காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள்-மரண சான்று சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவு
திருவனந்தபுரம்: காஷ்மீரில் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 தீவிரவாதிகளின் மரணச் சான்றுகளை சமர்ப்பிக்க கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாமில் கடந்த வாரம் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற சில தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு கொன்றது. கொல்லப்பட்டவர்களில் 4 பேர் கேரளா மாநிலம் கண்ணூரை சேர்ந்த பயாஸ், பாயிஸ், அப்துல் ரகீம், முகமது யாசிப் என்பது தெரிய வந்தது. கேரளாவில் தீவிரவாதிகளை தேர்வு செய்து பாகிஸ்தானுக்கு பயிற்சிக்கு அனுப்பி வந்ததும் தெரிய வந்தது.
இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு குறித்து கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தது.
அப்போது நீதிபதி விஜயகுமார் காஷ்மீரில் கொல்லப்பட்ட 4 தீவிரவாதிகளின் மரணச்சான்றுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications