மத்தியப் பிரதேசம்: பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவபுரி (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியியானர். சுமார் 50 பேர் காயமடைந்தனர்.
சிவபுரி அருகே உள்ள பந்தர்வாஸ் ரயில் நிலையயத்தில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.
கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் அந்த ரயில் நிலையத்தில் இந்தூர்-குவாலியர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நின்று கொண்டிருந்தது. அந்த ரயிலுக்கு வேறு என்ஜின் பொறுத்தப்பட இருந்த நிலையில் எதிரே வந்த சரக்கு ரயில் இந்த ரயில் மீது மோதியது.
இதில் 2 பொதுப் பெட்டிகள் (unreserved compartments) நசுங்கிவிட்டன. அதிலிருந்த 15 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
கடும் மழை காரணமாக மீட்புப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications