2011 ஜனவரியில் விவசாயிகளுக்கு இலவச மின்சார மோட்டார் திட்டம் தொடக்கம்-ஆற்காடு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக அரசின் விவசாயிகளுக்கான இலவசமின்சார மோட்டார் வழங்கும் திட்டம் 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்படும் என மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
30 ஆண்டு, 40 ஆண்டுகளுக்கு முன்னாள் விவசாயிகளால் வாங்கி பயன்படுத்தப்பட்ட, மின் மோட்டார்கள் பழுதாகிறது. மீண்டும் அதே மோட்டார்களை இயக்குவதால் அதிக மின்சாரம் செலவாகிறது.
இதனால் தமிழக அரசு இலவச மின்மோட்டார் வழங்கம் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணி தற்போது நடைப்பெற்று வருகிறது. கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன், வரும் ஜனவரி மாதம் முதல் இலவச மின்மோட்டார் திட்டம் துவங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications