சிறையில் இருந்து தப்பியோடிய கைதி போலீசாரிடம் சிக்கினார்

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி சிறையில் இருந்து தப்பியோடிய கைதியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

தென்காசியை அடுத்த ஆய்குடி கிளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி சுடலையாண்டி. இவர் 5 வருடங்களாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

இதனால் விரக்தியடைந்த சுடலையாண்டி தனக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்குமாறு அதே ஊரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மனைவி மகேஸ்வரியிடம் தகராறு செய்தார். இதையடுத்து ஆய்க்குடி போலீசார் சுடலையாண்டியை கைது செய்து தென்காசி மாஜிஸ்திரேட் வனிதா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து அவரை தென்காசி கிளை சிறைக்குப் போலீசார் அழைத்து வந்தனர். அங்கு விலங்கை கழற்றியதும் சுடலையாண்டி தப்பி ஓடினார். இது குறித்து தென்காசி போலீசார் வழக்கு பதிவு செய்து சுடலையாண்டியை தேடி வந்தனர்.

இந்நிலையில் குத்துகல்வலசையில் வாகன சோதனையில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் அவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+