For Daily Alerts
Just In
காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்க டெல்லி வந்தார் சார்லஸ்
சார்லஸும், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலும் இணைந்து இன்று ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைக்கவுள்ளனர்.
டெல்லி வந்த சார்லஸ் தம்பதியை இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும், காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழுத் தலைவருமான சுரேஷ் கல்மாடி வரவேற்றார்.
வழக்கமாக இங்கிலாந்து ராணிதான் காமன்வெல்த் போட்டியைத் தொடங்கி வைப்பார். ஆனால் தற்போது அவர் பிசியாக இருப்பதால் தனக்குப் பதில் மகன் சார்லஸை அனுப்பி வைத்துள்ளார்.
Comments
Story first published: Sunday, October 3, 2010, 12:50 [IST]