திமுகவோடு காங். கூட்டணி என்பது கடாயமல்ல: எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம்
சென்னை: திமுகவோடு காங்கிரஸ் கட்சி எப்போதும் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறினார்.
சென்னையில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர்,
இப்போது திமுகவோடு காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. அதற்காக திமுகவோடுதான் காங்கிரஸ் கட்சி எப்போதும் இருக்க வேண்டும என்பது கட்டாயமல்ல.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்து மிகச் சிறந்த ஆட்சியை நடத்தியவர் காமராஜர் மட்டுமே. காமராஜர் ஆட்சியில்தான் தமிழகம் பெரும் வளர்ச்சியைப் பெற்றது. எனவே அது போன்றதொரு ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினரின் விருப்பம். மாநில அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களில் மத்திய அரசின் பங்கு என்பது நிச்சயமாக உள்ளது.
திமுக அரசின் சாதனை திட்டங்கள் அனைத்திலும் காங்கிரசும் ஒரு பங்காளி என்பதை உணர வேண்டும். இதை காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களிடம் விளக்கிச் சொல்ல வேண்டும். இதுதான் காமராஜ் ஆட்சி அமையும் லட்சியத்துக்கு வலுசேர்க்கும் என்றார்.












Click it and Unblock the Notifications