கோவில்பட்டியில் பரிதாபம்-குழந்தையைப் பார்க்க வந்த தந்தை ரயிலில் விழுந்து சாவு
கோவில்பட்டி: குழந்தையை பார்க்க வந்த தந்தை ரயிலில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மதுரை சேர்ந்த ஹரிதாசன் மகன் ரமேஷ்குமார். மதுரையில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர் பிரவசத்திற்காக கோவில்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார்.
கடந்த 16 நாட்களுக்கு முன் மகேஸ்வரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதனை பார்ப்பதற்காக நேற்றிரவு ரமேஷ்குமார் மதுரையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரசில் கோவில்பட்டி வந்துகொண்டிருந்தார்.
ரயிலில் நன்றாக தூங்கி விட்ட அவர் கோவில்பட்டியில் ரயில் நின்று கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. அதன்பிறகு சிறிது நேரத்தில் கண் விழித்த அவர் கோவில்பட்டியில் இருந்து ரயில் புறப்படுவதை பார்த்து ஓடும் ரயிலில் இருந்து கீழே இறங்கினார். இதில் அவர் தண்டவளத்தில் தவறி விழுந்து தலை தூண்டிக்கப்பட்டு இறந்தார்.












Click it and Unblock the Notifications