பைக்குகள் மோதிக் கொண்டதில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பலி
Subscribe to Oneindia Tamil
நெல்லை: செங்கோட்டை அருகே இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் பலியானார்.
செங்கோட்டை மேலூரை சேர்ந்தவர் சிவகுருபாண்டியன். இவர் பாப்பாக்குடி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். நேற்று இவரும், தனிப்பிரிவு ஏட்டு சுப்புராமகிருஷ்ணனும், அப்பகுதியில் பைக்கில் ரோந்து சென்றனர்.
இடைக்கால் ரோட்டில் இவர்கள் சென்றபோது எதிரே வந்த பைக் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் அம்பை அரசு மருத்துவமனையி்ல் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருபாண்டியன் இறந்தார். அவர் ஓய்வு பெற இன்னும் 8 மாதங்களே இருந்தது. காயமடைந்த ஏட்டுக்கு தீவிர சிகிக்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications