ஜேப்பியார் கல்லூரியில் பெரும் வன்முறை: ஆய்வகத்துக்கு தீ
சென்னை: ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி, விடுதி, ஆய்வகங்களை சூறையாடினர். 200க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் உடைக்கப்பட்டு, ஆய்வகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
இதையடுத்து கல்லூரியும் விடுதியும் 1 வாரம் மூடப்பட்டு மாணவ, மாணவிள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை அருகே சோழிங்கநல்லூர் செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரியும், இதன் வளாகத்திற்குள்ளேயே செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியும் உள்ளன.
சுமார் 6,000 மாணவ- மாணவிகள் படித்து வரும் இந்தக் கல்லூரிகளின் விடுதியில் 1,200 பேர் தங்கியுள்ளனர்.
ஜேப்பியார் கல்லூரி இயக்குனராக மரிய வில்சன் இருந்தார். சமீபத்தி்ல் ரெஜினா வில்சன் இயக்குனராக நியமிக்கப்பட்டார். கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் செல்போன் பேசக்கூடாது, மாணவர்கள் வெளியில் செல்லும்போதும் உள்ளே வரும்போதும் அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்பது உள்பச ரெஜினா சில கடுமையான விதிமுறைகளை அமலாக்கியதால், அதற்கு விடுதி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந் நிலையில் நேற்றிரவு விடுதி மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இயக்குனராக மீண்டும் மரிய வில்சனையே மீண்டும் நியமிக்க வேண்டும் என்றும் செல்போனில் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரினர்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி, விடுதி, ஆய்வகங்களை மாணவர்கள் சூறையாடினர். 200க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
விடுதியில் இருந்த படுக்கைகளுக்கும், ஆய்வகத்திற்கும் தீ வைத்தனர். மின் வயர்களையும் அறுத்து விடுதியில் மின்தடையை ஏற்படுத்தினர்.
போலீசார் விரைந்து வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கடடுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த போராட்டத்தையடுத்து ஜேப்பியார் கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுதியில் தங்கி இருந்த மாணவர்கள் அனைவரும் இன்று காலை வெளியேற்றப்பட்டனர்..
மீண்டும் கல்லூரிக்கு வரும்போது பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications