ட்விட்டர் சிஇஓ விலகல்!
Subscribe to Oneindia Tamil

இனி இவான் பொறுப்புக்களை, நிறுவனத்தின் சிஓஓவாக செயல்பட்டு வந்த டிக் கோஸ்டலோ கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளம் பிரபலமாக இருந்தாலும், அதன் மூலம் வருமானம் வரும் வழிகளை உருவாக்கியவர் கோஸ்டலோ. 2007-ம் ஆண்டு கூகுள் வாங்கிய 'ஃபீட்பர்னர்' நிறுவனத்தை உருவாக்கியவரும் கோஸ்டலோதான். எனவே அவரது தலைமையில் நிறுவனம் அதிக வருவாய் பெறும் என்று நம்புவதாக இவான் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் 20 பேர் பணியாற்றிய ட்விட்டர் நிறுவனத்தில் தற்போது 300 பேர் பணியில் உள்ளனர். இந்த தளத்தை உருவாக்கிய இன்னொருவர் ஜாக் டோர்ஸி, தற்போது ட்விட்டரின் தலைவராக உள்ளார்.












Click it and Unblock the Notifications