சட்ட மேலவைத் தேர்தலை எதிர்த்து ஹைகோர்ட்டில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தி்ல் சட்ட மேலவைக்கு தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பாரதி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழக அரசு மேலவைத் தேர்தலை அவசர அவரசமாக நடத்த முயற்சிக்கிறது. இதற்கான நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை. எனவே தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி சுகுணா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேலவைத் தேர்தலுக்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கிவிட்டன. எனவே இதற்கு தடை விதிக்கக் கூடாது.
மேலும் இதற்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றார்.
இதை ஏற்ற நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications