'ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்'-அந்தமானில் கலக்கும் பிஎஸ்என்எல்!
போர்ட் ப்ளேர்: ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்பதைப் போல, எத்தனையோ தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும் பிஎஸ்என்எல்லின் சேவைக்கு உள்ள சிறப்பே தனிதான்.
'ஆயிரம் குறைகள் இருந்தாலும், எங்களுக்கு அரசாங்கத்தின் பிஎஸ்என்எல் இணைப்புதான் வேண்டும்' என்று நினைக்கும் மக்கள் இன்னும் அநேகம் பேர். அதன்விளைவு, அந்தமான் நிகோபர் தீவுகளில் ஏராளமான தனியார் தொலைபேசி ஆபரேட்டர்கள் இருந்தும், அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையரைப் பெற்று முன்னணியில் உள்ளது பிஎஸ்என்எல்.
உள்கட்டமைப்பு வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தமான் நிகோபர் தீவுகளில் 1,82,003 இணைப்புகள் தந்து முதலிடத்தில் உள்ளது பிஎஸ்என்எல். இங்கு தொலைத் தொடர்பு அடர்த்தி (tele - density) மொத்தம் 62 சதவீதமாக உள்ளது. இதில் பிஎஸ்என்எல் மட்டும் 36 சதவீதத்தைக் கொண்டுள்ளது.
இப்போது அந்தமான் வடக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளிலும் பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவை தடையின்றி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 341 கிராமங்களில் பொதுத் தொலைபேசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications