For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

15 வயது சிறார்களுடன் உடலுறவு வைத்த இந்திய ஆசிரியை கைது

By Chakra
Google Oneindia Tamil News

Hina Patel
லண்டன்: 15 வயதேயான இரு மாணவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இரு மாணவர்களுடனும் தான் முழு அளவிலான உறவை வைத்துக் கொண்டதாகவும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

அந்த ஆசிரியையின் பெயர் ஹீனா படேல். வயது 37. செளத்போர்ட் அருகே உள்ல பர்க்டேல் ஹைஸ்கூலில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் படிக்கும் இரு மாணவர்களை தனது வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டதாககுற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஹீனா கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தான் இரு மாணவர்களுடனும் முழு அளவிலான உடலுறவை வைத்துக் கொண்டதாக ஒப்புக் கொண்டார் ஹீனா.

இந்த ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதியிலான காலகட்டத்தில் ஹைடவுனில் உள்ள தனது வீட்டுக்கு இந்த இரு மாணவர்களையும் வர வைத்து பலமுறை உறவு கொண்டுள்ளார் ஹீனா என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று தனது குற்றத்தை கோர்ட்டில் ஒப்புக் கொண்டார் ஹீனா. சம்பந்தப்பட்ட இரு மாணவர்கள் யார் என்ற விவரத்தை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஹீனா பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்.

தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் ஹீனா. அவருக்கு நவம்பர் 22ம் தேதி லிவர்பூல் கிரவுன் கோர்ட்டில் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X