11 பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு-தீர்ப்பு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு ஆதரவாக சபாநாயகர் போபையா இந்த 11 பேரையும் நீக்கிவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட இந்த வழக்கு விசாரணை ஏற்கெனவே முடிந்துவிட்டது. இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கில் இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது.
இந்த நிலையில் மூன்றாவது நீதிபதி சபாஹித் விசாரணை மேற்கொண்டார். விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தீர்ப்பை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 எம்எல்ஏக்கள் மட்டும் தொடர்ந்துள்ள இன்னொரு வழக்கை வரும் நவம்பர் 2-ம் தேதி புதிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்.












Click it and Unblock the Notifications