சேலம் அருகே கட்சி கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்ப்பு: போலீஸ் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே நடுவலூர் கிராமம் உள்ளது. இங்குள்ள பேருந்து நிலையத்தில் அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மர்ம ஆசாமிகள் சிலர் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி கொடிக் கம்பங்களையும் வெட்டி சாய்த்துவிட்டு தப்பிவிட்டனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் கெங்கவல்லி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சேலம் எஸ்.பி. ஜான் நிக்கல்சன் வெட்டி சாய்க்கப்பட்ட கொடிக் கம்பங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த சம்பவத்தால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.












Click it and Unblock the Notifications