விமானத்தின் வாலும், இறக்கையும் மோதல்-மும்பை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் இன்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் இறக்கைப் பகுதியும், கிங்பிஷர் விமானத்தின் வால் பகுதியும் உரசிக் கொண்டன. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் 2.05 மணியளவில் இந்த விபத்து நடந்தது.
சம்பவம் நடந்தபோது ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகள் அமர்ந்திருந்தனர். கிங்பிஷர் விமானம் காலியாக இருந்தது. இந்த விபத்தில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தெரியவில்லை.
மும்பை -மஸ்கட் இடையிலான ஜெட் ஏர்வேஸ் பே பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. 85வது பே பகுதியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் நகர்ந்து கொண்டிருந்தது. அப்போது 84வது பே பகுதியில் இருந்த கிங்பிஷர் விமானத்தின் வால் பகுதியில், ஜெட் ஏர்வேஸின் இறக்கைப் பகுதி உரசிக் கொண்டது.
இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏதும் நடக்கவில்லை. இந்த விபத்தைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கப்பட்டு வேறு விமானத்தில் ஏற்றி மஸ்கட் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications