எரிவாயுத் தட்டுப்பாடா? - மத்திய அரசு விளக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் சமையல் எரிவாயுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. சில பகுதிகளில் தட்டுப்பாடு இருந்தாலும், அவை இந்த மாத இறுதிக்குள் சரியாகி விடும்.
இந்தியன் ஆயில் கார்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவன அதிகாரிகளை அழைத்து, பெட்ரோலியம் துறை செயலாளர் எஸ்.சுந்தரேசன் பேசி இருக்கிறார்.
சமையல் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலைகளை, விடுமுறை நாட்களிலும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தடையின்றி எரிவாயு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications