15 பில்லியன் டாலர் வர்த்தகம்: இந்தியா - மலேசியா ஒப்பந்தம்!
கோலாலம்பூர்: வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் தடையில்லா வர்த்தகம் நடைபெறுவதற்கான புதிய ஒப்பந்தத்தில் இந்தியாவும் மலேசியாவும் கையெழுத்திட்டன.
ஜப்பான் சென்ற பிரதமர் மன்மோகன்சிங் அங்கிருந்து நேற்று மலேசியா தலைநகர் கோலாலம்பூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மலேசிய பிரதமர் முகமது நஜிப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கலாசார ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினார்கள். பின்னர் வர்த்தகம் உள்ளிட்ட 5 புதிய ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.
வரும் 2015-ம் ஆண்டுக்குள் 15 பில்லியன் டாலர் அளவுக்கு இருநாடுகளும் பரஸ்பர வர்த்தகம் செய்வது தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானது (Comprehensive Economic Cooperation Agreement). இந்த ஒப்பந்தப்படி, இருநாடுகளும் தடையில்லா வர்த்தக உறவை மேற்கொள்ளவிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் மலேசிய பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், "இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் இந்தியா தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தை அரசாங்கம் மட்டும் தனியாக செயல்படுத்த முடியாது. ஏனெனில் பெரிய அளவிலான திட்டங்களுக்கு லட்சக்கணக்கான கோடி டாலர் தொகை தேவைப்படுகிறது.
எனவேதான் இதில் தனியார் நிறுவனங்களின் முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தனியார் நிறுவனங்கள் இதில் பங்குபெறும் வகையில் எளிய முறையிலான நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நேரடி முதலீடுகளை பெறுவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, மலேசிய நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க முன்வர வேண்டும்.
இது உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். வரும் ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சியுடன் சேர்ந்து மலேசிய நிறுவனங்களும் வளர வேண்டும். எனவே மலேசிய தொழில் அதிபர்கள் இந்தியாவில் தொழில் தொடங்க வரவேண்டும் என வரவேற்கிறேன்.
தடையில்லா வர்த்தகம் மூலம் இருநாடுகளுமே பெரும் நன்மைகளைப் பெறும்" என்றார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications