செஞ்சி சிறையில் இளம் பெண் கற்பழிப்பு-3 சிறைக் காவலர்களுக்கு ஆயுள் தண்டனை உறுதி
சென்னை: செஞ்சி கிளைச் சிறையில் ரீட்டா மேரி என்ற பெண்ணை கற்பழித்த வழக்கில் சிக்கி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 சிறைக் காவலர்களுக்கு, அதை உறுதி செய்து இன்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
2001ஆம் ஆண்டு திண்டிவனத்தில் இளம்பெண் ரீட்டா, பாலியல் தொழில் செய்ததாக கைது செய்யப்பட்டார். செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த பெண்ணை, சிறைக்காவலர்களே கற்பழித்த கொடுமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிறை காவலர்கள் மீது திண்டிவனத்தில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிமன்றம், செஞ்சி கிளை சிறையின் தலைமை காவலர் நாசர் மற்றும் சிறைக்காவலர்கள் ஜெயபாலன், அன்பழகன், ராமசாமி ஆகிய 4 பேருக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதித்து 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஒரு வார்டன் மட்டும் விடுவிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து தண்டனை பெற்ற 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி சுதந்திரம், சிறை காவலர்கள் ராமசாமி, ஜெயபாலன், அன்பழகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டார்.
அதேசமயம், தலைமை சிறைக்காவலர் நாசர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் அவரை மட்டும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications