ஜெ. ஆதரவு தருவதாக கூறியது குறித்து எனக்குத் தெரியவில்லை-மன்மோகன் சிங்

தென் கொரியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நேற்று அங்கிருந்து தாயகம் திரும்பினார். வரும் வழியில் விமானத்தில் வைத்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,
தற்போது நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. எனவே இதுகுறித்து கருத்து தெரிவிப்பது முறையாக இருக்காது என்றார். ராஜா நீக்கப்படுவாரா என்ற கேள்விக்கும் இதே போலவே பதிலளித்தார் பிரதமர்.
ராஜாவை நீக்கினால், திமுக ஆதரவைத் திரும்பப் பெற்றால் நான் 18 எம்.பிக்களைத் திரட்டித் தருகிறேன் என்று ஜெயலலிதா கூறியிருப்பது குறித்து கேட்டபோது, இதை இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். உங்கள் மூலமாகவே எனக்கு இது செய்தியாக வந்துள்ளது. இதுகுறித்து எனக்குத் தெரியாது. இருப்பினும் இதுகுறித்து காங்கிரஸ் மேலிடம்தான் கவலைப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும். ஜெயலலிதா என்ன பேசினார் என்பது குறித்து எனக்குத் தெரியாது.
நாங்கள் தற்போது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். அந்தக் கூட்டணி இப்போதைக்குத் தொடர்கிறது என்றார் பிரதமர்.












Click it and Unblock the Notifications