For Quick Alerts
For Daily Alerts
Just In
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் இந்திரா காந்தி, அன்னை தெரசா!
டைம் பத்திரிக்கை கடந்த நூற்றாண்டின் சக்தி வாய்ந்த 25 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் அமெரிக்கப் பெண்ணான ஜேன் ஆடம்ஸ் முதலிடத்தில் உள்ளார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹில்லாரி கிளின்டன் 6-வது இடத்தில் உள்ளார்.
அன்னை தெரசா 22-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திரா காந்தி, அன்னை தெரசா ஆகியோர் தான் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் ஆவர்.
இந்திரா இந்தியாவின் மகள். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் கண்காணிப்பில் வளர்ந்தவர் என்று டைம் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
1966-ல் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றபோது, பிரச்சினைக்குரிய 'இந்தியா இப்போது ஒரு பெண்ணின் உறுதியான கையில்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது டைம்.
Comments
Story first published: Saturday, November 20, 2010, 13:50 [IST]