பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: பக்தர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சபரி்மலையில் பலத்த மழை பெய்ததால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் பக்தர்கள் கவனத்துடன் குளிக்கும்படி போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் கடந்த இரண்டு தினங்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சபரிமலையில் கன மழை பெய்தது. நள்ளிரவு வரை மழை நீடித்தது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பம்பையில் குளிக்கச் செல்லும் பக்தர்கள் கவனமாக இருக்கும்படி போலீசார் எச்சரித்து வருகின்றனர்.

சபரிமலையில் மாரடைப்பால் 2 பேர் மரணம்:

கோவை மாவட்டம் சரவணபட்டி சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவர் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார்.

ஐயப்ப பக்தரான இவர் நேற்று சபரிமலை வந்தார். அதிகாலை நீலமலை அருகே வந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடன் வந்தவர்கள் அவரை அருகில் உள்ள சிகிக்சை மையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் கிருஷ்ணசாமி இறந்தார்.

இதே போல் ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் பம்பை அருகே மாரடைப்பால் மரணமடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+