தேர்தல் முடிவு சர்ச்சைக்குரியது, விசாரிக்கப்பட வேண்டும்-லாலு பேச்சு
பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தல் ஆச்சரியம் தருகிறது, எதிர்பாராததாக உள்ளது. இது சர்ச்சைக்குரியதாக நான் உணர்கிறேன். இருப்பினும் நிதிஷ் குமாரை நான் பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்துள்ள ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ்.
பீகார் தேர்தல் முடிவு குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில் இந்த தேர்தல் முடிவு பெரும் சர்பிரைஸ் ஆக உள்ளது. சர்ச்சைக்குரிய முடிவாகவும் உள்ளது. என்ன என்பது குறித்து ஆராயப்பட வேண்டும்.
இருப்பினும் இந்த வெற்றிக்காக நிதிஷ் குமாருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் நிதிஷை மட்டுமே பாராட்டுகிறேன், பாஜகவை அல்ல.
புதிய அரசுக்கு எனது கட்சி முழு ஒத்துழைப்பை அளிக்கும். தோல்வியை நாங்கள் ஏற்கிறோம். மக்களின் தீர்ப்பை மதிக்கிறோம். கட்சி அடைந்த தோல்விக்கான காரணத்தை நாங்கள் ஆராய்வோம் என்றார் லாலு.